போராட்டங்களால் CID விசாரணைகளைத் தடுக்க முடியாது – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

போராட்டக்காரர்கள் ஒன்று அல்ல, பத்து கூடாரங்கள் அமைத்துப் போராடினாலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எவரேனும் நடந்துகொண்டாலோ அல்லது கருத்துக்களை வெளியிட்டாலோ, அது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அதன் பின்னர் நீதிமன்றமே உரிய தீர்மானத்தை எடுக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டங்கள் மூலம் மக்களின் மனங்களை வேறு வழிகளில் திசைதிருப்பும் ஒரு கலாசாரம் வளர்ந்து வருவதாகவும், அதன் காரணமாகவே இந்த விசாரணைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், 12 அல்லது 18 பேர் கொண்ட குழுக்களை வைத்துக்கொண்டு போராடுவதனால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு எந்தவொரு பாதிப்பும் அல்லது தடையும் ஏற்படாது என்றும், விசாரணைகள் சரியான முறையில் முன்னோக்கி நகரும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna
யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் வெற்றுக்காணிகளை சுருட்டும் கும்பல்: பொலிஸார் விசாரணை!
india
மிக்ஸர் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கிய வேர்க்கடலை: 3 வயது சிறுவன் உயிரிழப்பு!
anuradhapura
அனுராதபுரத்தில் கோர விபத்து: இருவர் பலி; கர்ப்பிணிப் பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
nalinda jayatissa
சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதல்: 200 பேரிடம் விசாரணை - பின்னணியில் உள்ளவர்களை வேட்டையாட 8 குழுக்கள் அமைப்பு!
police sri lanka
'அபராதம் செலுத்துமாறு' வரும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸார்
sri lankan food
சர்வதேச உணவு சுற்றுலாத் தரவரிசை 2026: டாப் 50 பட்டியலில் இடம்பிடித்தது இலங்கை!