🔴 VIDEO வவுனியா இலுப்பையடியில் வீதியோர வியாபார நிலையங்கள் மாநகர சபையால் அகற்றல்: வியாபாரிகள் கடும் எதிர்ப்பு

வவுனியா மாநகர சபையால் இலுப்பையடி வீதியோர வியாபார நிலையங்கள் அகற்றப்பட்ட போது அப் பகுதியில் வீதியோர வியாபாரிகளுக்கும் மாநகர சபையினருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது.

வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் அமைந்திருந்த வீதியோர கடைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கை வவுனியா மாநகர சபையால் இன்றையதினம் (14.07) முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த இடத்திலிருந்து வேறு மாற்று இடத்திற்கு சென்று வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஏற்கனவே மாநகரசபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அகற்றப்படாத வர்த்தக நிலையங்களை அகற்றும் நடவடிக்கையை மாநகரபை முன்னெடுத்தது.  இதன்போது வீதியோர வர்த்தக நிலைய உரிமையாளர்களால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனால் வர்த்தகர்களுக்கும் மாநகரசபை உறுப்பினர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அவ்விடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், வீதியோரமாக இருந்த வர்த்தக நிலையங்களும் முழுமையாக இதன்போது அகற்றப்பட்டதுடன் பொலிசார் பாதுகாப்பு கடமையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

3cf01349-e92f-4b44-9571-3663f9f70192
புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக கூறி அகழ்வு பணி!
pillayan
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து பிள்ளையானுக்கு முன்கூட்டியே தெரியும்! பாதுகாப்பு அமைச்சர்
Nainadhivu Sri Nagapoosani Amman Temple 5
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தீர்த்த திருவிழா.
Chamber-House-of-Commons-Houses-Parliament-London
வெளிநாட்டு ஒன்றின் நாடாளுமன்றில் செம்மணிக்காக ஒலித்த குரல்!
New Project t
நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட அனைத்து விடுதி உரிமையார்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்!
17519568840
கிளிநொச்சியில் துப்பாக்கிச்சூடு! வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடிய சாரதி!