வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தப்படுத்த ரூ.10,000 வழங்க தீர்மானம்!

கொழும்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை, சுத்தப்படுத்துவதற்கு, தலா 10,000 ரூபாய் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன ஜனக்க குமார இதனை அறிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான மதிப்பீடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாவட்ட செயலாளர் கூறியுள்ளார்.

அத்துடன், பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள பிரதேச செயலகங்களில் வழமையான சேவைகளைப் பெறுவோர் நிலைமை வழமைக்குத் திரும்பும் வரை ஏனைய பிரதேச செயலகங்களில், தங்களுக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன ஜனக்க குமார கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

flood
பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!
srilanka
டித்வா புயல் தாக்கம் - மரணங்கள் 350 ஐ கடந்தது
tourist
இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!
anura
நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனம்!
water cut
.நீர்விநியோகம் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
al exam
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு