செல்வ சந்நிதி திருவிழா: காவடிகள், பாதயாத்திரிகளுக்காக பலாலி வீதி திறப்பு – காலை 6 முதல் இரவு 9 மணி வரை அனுமதி!

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர் மற்றும் தீர்த்த உற்சவங்களை முன்னிட்டு, பலாலி உயர் பாதுகாப்பு வலய வீதியினூடே பொதுமக்கள் நடந்து செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினூடாகச் செல்லும் பலாலி வீதியில், பொதுமக்கள் நடந்து செல்வதற்கோ அல்லது வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கோ கடந்த காலத்தில் தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. மேலும், குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே இவ்வீதி திறக்கப்பட்டு இயங்கி வந்தது.

இந்நிலையில், செல்வ சந்நிதி ஆலயத்தின் தேர்த் திருவிழா வியாழக்கிழமையும் (இன்று), தீர்த்தத் திருவிழா வெள்ளிக்கிழமையும் நடைபெறவுள்ளன. இதனை முன்னிட்டு, ஆலயத்திற்கு வருகை தரும் காவடி மற்றும் பாதயாத்திரை பக்தர்களின் வசதியைக் கருத்திற் கொண்டு இராணுவத்தினர் இந்த விசேட தளர்வை அறிவித்துள்ளனர்.

அதன்படி, காலை 06:00 மணி முதல் இரவு 09:00 மணி வரையிலான காலப்பகுதியில் பொதுமக்கள் பலாலி வீதியினூடாக நடந்து செல்லவும், வீதியில் தரித்து நிற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் இந்த அறிவிப்பானது ஆலய உற்சவத்திற்குச் செல்லும் பல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்குப் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arrest
இலங்கை வரலாற்றில் முதன்முறை: 1 பில்லியன் டொலர் மோசடி தொடர்பில் வங்கி அதிகாரிகள் கைது!
vavuniya
யாழ்ப்பாணம் - கொழும்பு புகையிரதம் மோதி வவுனியா இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
Tamil Journalists' Union
இலங்கை ஊடக வரலாற்றில் புதிய சாதனை: 90 ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகள், கைபேசிகள் வழங்கி கெளரவிப்பு!
boat accident
அங்குலான அருகே கடற்படையின் ‘டோரா’ படகு விபத்து: விமானப்படை உதவியுடன் 11 பேர் மீட்பு!
trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!