கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான செயற்பாடுகள்: கவலைகளை எழுப்பியது இலங்கை

கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) தொடர்பான சின்னங்களை பொதுவெளியில் பயன்படுத்துவது மற்றும் பிரிவினைவாதச் சித்தாந்தங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் குறித்து கனேடிய அரசாங்கத்திடம் இலங்கை தனது கடுமையான கவலையை வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கேத்ரின் மார்ட்டின் உடனான சந்திப்பில் இந்த கவலையை வெளியிட்டுள்ளார்.

கனடாவில் உள்ள உள்ளூர் குழுக்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் இலங்கையின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க முயற்சிகளை பலவீனப்படுத்துவதாகவும், கட்டுப்படுத்தப்படா விட்டால் இருதரப்பு உறவுகளைப் பாதிக்கலாம் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த உயர்ஸ்தானிகர், தமிழீழ விடுதலைப் புலிகள் இப்போதும் கனடாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்றும், அதன் சின்னங்களையோ அல்லது பிரிவினைவாத சித்தாந்தங்களையோ கனேடிய மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்றும் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், கனடா எப்போதும் இலங்கையின் இறைமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆதரவாக உள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

hatton
ஹட்டன் டிக்கோயா இரட்டைக் கொலையாளி இன்று அதிகாலை தப்பியோட்டம்!
arrest
3 வருடங்களுக்கு முன் நடந்த இரட்டைக் கொலை: தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் கைது
jaffna news
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் ஆராய்வு!
arrest
19 நாட்களேயான கைக்குழந்தையை 1 லட்சத்திற்கு விற்க முயன்ற 6 பேர் கைது!
death
கல்விச் சுற்றுலாவில் நேர்ந்த பெரும் சோகம்: மாணவியைக் காப்பாற்ற முயன்ற கணித ஆசிரியர் உயிரிழப்பு!
iran
தெற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!