உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 3 வாரங்களுக்கு முன்பே தேவாலயங்களை உளவு பார்த்த சுரேஷ் சலே: அமைச்சர் ஆனந்த விஜேபால

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 3 வாரத்துக்கு முன்னர், சுரேஷ் சலே, நீர்கொழும்பு பகுதிக்கு நான்கு பேரை அனுப்பி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் விசேட பூஜைக்கு கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை திரட்டியுள்ளமை தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஷ் சலே நேரடியாக தொடர்புகளை கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று, குண்டுத்தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை வழங்கியுள்ளதாகவும், இந்த விடயங்கள் அனைத்தும் தீவிரமான விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு பகுதிக்கு அனுப்பப்பட்ட நான்கு பேரில் ஒருவர், இஸ்லாம் அடிப்படைவாதி என்றும், அவர் ஐ.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எனினும், அவர் தற்போது வரை காணமால் போயுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தாக்குதல் நடத்தப்படும் வரை இஸ்லாம் அடிப்படைவாதிகளை பயன்படுத்தி, பல்வேறு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டமை விசாரணைகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அது மாத்திரமன்றி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மைகளும், முக்கிய விபரங்களும் வெளியில் கசிந்துவிடக் கூடாது என்பதற்காக, மிக முக்கியமான மற்றும் இரகசியமான தகவல்கள் வெளிவருவதைத் தடுப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளை சுரேஷ் சலே முன்னெடுத்திருந்தார் என்றும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
கிளிநொச்சியில் இளம் கலைஞர் கைது: அரசின் இரட்டை நிலைப்பாட்டைச் சாடும் நாமல் ராஜபக்ஷ!
vavuniya
மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்: வவுனியா 'சிறுவர் பாதாளக் குழு' சிக்கியது! 7 பேருக்கு நீதிமன்ற உத்தரவால் சிறுவர் இல்லத்தில் அடைப்பு!
arrest
எழுச்சி பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் பகிர்ந்த கிளிநொச்சி சொல்லிசை கலைஞன் கைது!
vavuniya accident
கனகராயன் குளத்தில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!
chennai srilankan girl death
சென்னை கோயம்பேடு கொடூரம்: காரில் மோதி இலங்கை பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுமியும் பலி
gotabaya rajapaksa
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் - கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை