இன்றையதினம் காலை விசேட அதிரடிப்படையினரால் யாழ்ப்பாணம் முலவை சந்திக்கு அருகில் உள்ள வீடொன்று திடீரென சுற்றிவளைக்கப்பட்டது.

இளைஞர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் தனது பிறந்த நாள் கொண்டாட்ட காணொளியை பதிவேற்றம் செய்தமை, சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவரின் வீட்டில் சோதனை இடம்பெற்றது
குறித்த நபர் வீட்டில் இல்லாத நிலையில் அங்கு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.