வடகிழக்கு ஜப்பானில் உள்ள ஆமோரி மற்றும் ஹொக்காய்டோ பிராந்தியங்களின் அருகே கடலில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் சுமார் மூன்று மீற்றர் (சுமார் 10 அடி) உயரம் வரையிலான ராட்சத அலைகள் ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையைத் தாக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ஆமோரி மாகாணக் கடற்கரையில் இருந்து சுமார் 80 கிலோமீற்றர் தொலைவில், 50 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து, கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்கு வெளியேறுமாறு ஜப்பான் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
