குற்ற பிரதேசங்களை காணொளி எடுத்தல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

குற்றங்கள் நடக்கும் இடங்களில் ஆதாரங்களைப் பாதுகாப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கௌரவத்தைப் பேணுவது தொடர்பாக இலங்கை காவல்துறை பொதுமக்களுக்குக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

குற்ற இடப் புலனாய்வுப் பயிற்சிப் பிரிவின் பொறுப்பதிகாரி சாமர விஜேரத்ன இது குறித்துத் தெரிவிக்கையில், அங்கீகரிக்கப்படாத நபர்கள் புகைப்படம் எடுப்பதாலோ அல்லது காணொளி எடுப்பதாலோ மிக முக்கியமான தடயவியல் ஆதாரங்கள் அழிந்துபோக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ள குற்ற இடப் புலனாய்வு அதிகாரி (SOCO) பிரிவுகள், நவீன தொழில்நுட்பங்களுடன் புலனாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

பொதுமக்கள் தன்னிச்சையாக ஆதாரங்களைத் தொடுவதாலோ அல்லது இடத்தை அசுத்தப்படுத்துவதாலோ இவர்களின் விசாரணை பாதிக்கப்படுகின்றது.

அத்துடன் உயிரிழந்தவர்களின் அல்லது காயமடைந்தவர்களின் படங்களை சமூக வலைதளங்களில் பரப்புவது அவர்களின் தனிப்பட்ட கண்ணியத்தை மீறும் செயலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் குற்ற இடங்களுக்கு இடையூறு விளைவிப்பது அல்லது ஆதாரங்களை சிதைப்பது சட்டப்படி தண்டனைக்குரியது.

குறிப்பாக கொலை போன்ற பாரிய குற்றங்களில் ஆதாரங்களை சிதைப்பவர்களுக்கு நீண்ட காலச் சிறைத்தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது.

குற்ற இடங்கள் எவ்வளவு குழப்பமாகத் தெரிந்தாலும், புலனாய்வு அதிகாரிகள் வரும் வரை எதையும் மாற்ற வேண்டாம்.

காவல்துறை அதிகாரிகள் தமது கடமையை செய்ய முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமானால், உண்மையான ஆதாரங்கள் சிதையாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

maithripala sirisena
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மைத்ரிக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை ரத்து!
namal
பெருந்திரளான ஆதரவாளர்களுக்கு மத்தியில் சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் நாமல் ராஜபக்ஷ!
Shiranthi Rajapaksa
4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம்! FCID யிலிருந்து வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச
sritharan
பறிக்கப்பட்ட சிறீதரனின் தலைவர் பதவி! சாணக்கியனுக்கு சுமந்திரனால் வழங்கி வைப்பு!
al student
உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு வெளியான தகவல்!
three wheel accident
235 அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கர வண்டி விபத்து!