ரணிலின் மனைவியை சந்தித்த மேற்கத்திய இராஜதந்திரி

மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த முக்கிய தூதர் ஒருவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவை சந்தித்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் இடம்பெற்றதாகவும், இந்த சந்திப்பு, சுமூகமானதாகவும், அனுதாபமான முறையிலும் நடந்ததாகவும் வட்டாரங்களால் விவரிக்கப்பட்டது.

கலந்துரையாடலின் விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த விடயத்தை நன்கு அறிந்த வட்டாரங்கள், தூதரின் இந்த சந்திப்பு மரியாதைக்குரியதாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 முதல் 2024 வரை ஜனாதிபதி பதவியில் இருந்த ரணில் விக்ரமசிங்க,அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பான கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது கணவர் ஜனாதிபதியாக இருந்தபோது முதல் பெண்மணியாக பணியாற்றிய பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, ரணில் பதவி விலகிய பின்னர் பெரும்பாலும் பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி ரணிலின் கைது சுயாதீனமான நீதித்துறை செயல்முறைகளின் விளைவாகும் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

எனினும், ஆளும் நிர்வாகம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

batticaloa
மட்டக்களப்பில் பரபரப்பு: மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதி!
weather alert srilanka
தீவிரம் அடையும் சீரற்ற வானிலை: பல மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு
basil
பசில் ராஜபக்சவுடையது என கூறப்பட்ட மல்வானை வீடு மாணவர்களால் சுற்றிவளைப்பு!
tvk
21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க தடை: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை
india
தமிழக சட்டசபை தேர்தல்: வாக்களித்த இலங்கையர் உள்ளிட்ட மூவர் மீது சட்ட நடவடிக்கை
vijay tvk
முதலமைச்சர் விஜய் நெற்றியில் உள்ள கறுப்பு திலகம்: இதன் பின்னணியில் உள்ள ரகசியம்