பிரான்சின் பிரிட்டனி மாகாணம், ரோஸ்பெர்டன் நகரின் வனப்பகுதியில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியில் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், ரோஸ்பெர்டன் நகரில் உள்ள ஏரியில் இருந்து நேற்று மொரனி 29 ரக ஹெலிகாப்டர் தண்ணீரை சேகரிக்க முற்பட்டது. அப்போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் சில நொடிகள் வட்டமடைந்து பின்னர் நேரடியாக ஏரிக்குள் விழுந்தது.
இந்த விபத்தில் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
தண்ணீர் எடுக்கும் தருணத்தில் ஹெலிகாப்டரின் அடிப்பகுதி ஏரியின் நீரில் உராய்ந்ததே விபத்துக்கு காரணமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
🚨A firefighting helicopter crashed into a pond in Rosporden, France, on August 24, 2025, during a water scooping maneuver. The Morane 29 water bomber, fighting a nearby fire, crashed while refilling its bambi bucket. The French pilot and Polish firefighter officer miraculously… pic.twitter.com/ncvLzihiCG
— MainEchoesofGovernance (@governance49853) August 26, 2025
இதேவேளை, குறித்த விபத்து சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.