க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு: மீள் திருத்தத்திற்கு ஜூன் 25 முதல் விண்ணப்பிக்கலாம்!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு முடிவுகளை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்களை ஜூன் 25 ஆம் திகதி முதல் விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, மீள் திருத்த விண்ணப்பங்களை ஜூலை 7 ஆம் திகதி வரை இணையவழியில் சமர்ப்பிக்கலாம் என்று அத்துறை கூறியுள்ளது.

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகின.

இதற்கமைய, பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு 451,463 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர்.

பரீட்சையானது 3,547 பரீட்சை மத்திய நிலையங்களில் நடத்தப்பட்டதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vidya case
மாணவி வித்தியா படுகொலை வழக்கு: இருவர் விடுதலை; மூவருக்கு மரண தண்டனை உறுதி!
பிள்ளையான்
ஐந்து கொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள்: முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்
accident
கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் விபத்து: 17 மாணவர்கள் உட்பட 18 பேர் காயம்!
சுரேஷ் சலே
"சுரேஷ் சலேயின் கணினியைத் திறப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!" – தயாசிறி ஜயசேகர
yala national park
யால சரணாலயத்தில் விதிகளை மீறி அட்டகாசம்: 5 சுற்றுலாப் பயணிகள் அதிரடி கைது!
vijay sangeetha divorce
தமிழக முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஓகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!