புதிய மெகசின் சிறைச்சாலையில் திடீர் மோதல்: 11 கைதிகள் காயம்; பார்வையாளர்களுக்கான அனுமதி ரத்து!

கொழும்பு, புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று இரவில் ஏற்பட்ட திடீர் அமைதியின்மை மற்றும் மோதல் காரணமாக 11 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

Sri Lanka Air Force soldiers take up positions outside Sri Lanka’s main Welikada Prison in the capital Colombo on August 7, 2026, following reports that some prisoners were staging a protest inside. There have been two prison riots since early July, in which 10 guards and 23 inmates have been killed. (Photo by Ishara S. KODIKARA / AFP via Getty Images)

சம்பவத்தையடுத்துப் பாதுகாப்புப் படையினரின் உடனடித் தலையீட்டினால் தற்போது அங்கு நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், கலவரத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒன்பது கைதிகளை உடனடியாக வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்றைய அசாதாரண சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக முப்படையினரின் ஒத்துழைப்புப் பெறப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காகப் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மற்றும் முப்படையினர் அடங்கிய பலத்த பாதுகாப்புத் வளையம் அமைக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸாரும் ஆரம்பித்துள்ளனர்.

இதனிடையே, சிறைச்சாலையில் நிலவும் தற்போதைய பாதுகாப்புச் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இன்றைய தினம் கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சந்தர்ப்பம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

srilanka weather
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி: 6-ஆம் திகதிக்குப் பின் மீண்டும் கனமழை எச்சரிக்கை!
gotabaya rajapaksa
கோட்டாபயவின் மனு பரிசீலனை நிறைவு: தீர்ப்பு செப்டெம்பர் 22-க்கு ஒத்திவைப்பு!
electricity bill
மின் கட்டணத்தில் மாற்றமில்லை: பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
mahaweli river
அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை: பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு!
Mahara Prison
போதைப்பொருள் தட்டுப்பாடே காரணம்? மஹர சிறைச்சாலையில் ரூ.15 கோடி சேதம் — அதிர்ச்சி தகவல்கள்!
Pujith Jayasundara
"அரசியல்வாதிகளை நம்பினால் பூஜித்திற்கு நடந்ததே நடக்கும்": பொலிஸ் உயர்மட்ட 'வாட்ஸ்அப்' உரையாடலில் வெளிவந்த தகவல்!