🔴 PHOTO 86 கைக்குண்டுகளுடன் வவுனியாவில் ஒருவர் கைது

வவுனியா நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் நிலத்தின் கீழ் புதைக்கப்பட்ட 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொழும்பிலிருந்து வருகை தந்த புலனாய்வுத்துறை அதிகாரிகளோடு வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு பொலிசாரும் இணைந்து செட்டிகுளம் துட்டுவாகை மற்றும் நேரியகுளம் பகுதிகளில் உள்ள இரு வீடுகளில் சோதனையை மேற்கொண்டனர்.

இதன்போது நேரியகுளத்தில் வீடு ஒன்றின் அருகாமையில் பிளாஸ்டிக் பரல் ஒன்றினுள் 86 கைக்குண்டுகள், ரி- 56 ரக துப்பாக்கிக்கான ரவைகள், கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5600 போதை மாத்திரைகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன நிலத்தின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன.

இதனையடுத்து குறித்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது வவுனியா குற்றத்தடுப்பு விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக தலைமையில், பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச மற்றும் ராஜகுரு, பொலிஸ் அதிகாரிகளான ரன்வல, ரூபசிங்க, பாலசூரிய, சனுஷ், கேரத், சனத், பண்டார, திசாநாயக ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Ravi Mohan with new projects in Sri Lanka
இலங்கையில் புதிய திட்டங்களுடன் ரவி மோகன்
Marriage registration for Sri Lankan Tamils
இலங்கைத் தமிழர்களுக்கு திருமணப் பதிவு: 2 நாள் விசேட முகாம்.
fc
அசைவம் விற்கக்கூடாது.. KFCக்குள் புகுந்த கும்பல் அட்டூழியம் - உணவகம் மூடல்
New Project t (5)
காசாவில் இருந்த ஒரே ஒரு தேவாலத்தை குண்டுவீசி தகர்த்த இஸ்ரேல்! கொந்தளித்த ட்ரம்ப்..!
karnadaga
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 100 பெண்களை கொன்று கோவில் நிலத்தில் புதைப்பு? நெஞ்சை உலுக்கும் பகீர் தகவல்கள்
New Project t (4)
ஈழத்தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்கள்: இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தொடர்பா ?