🔴 PHOTO கொலையில் முடிந்த தகாத உறவு ; இலங்கையை உலுக்கிய சம்பவம்!

கண்டி, நாவலப்பிட்டி, இம்புல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி, இம்புல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரே கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கொலை செய்யப்பட்ட பெண், தனது கணவரிடமிருந்து பிரிந்து, தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபருடன் கம்பளை – புசல்லாவை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த 9 மாத காலமாக ஒன்றாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பெண் கடந்த 22 ஆம் திகதி மீண்டும் தனது கணவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

பின்னர் குறித்த பெண், பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு செல்லவிருப்பதாக தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபருக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.

ஆனால், தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபர் வெளிநாட்டு வேலைக்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபருக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபர் குறித்த பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை சந்திக்க வருமாறு அழைத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபரை சந்திப்பதற்காக நாவலப்பிட்டி, இம்புல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றிற்கு சென்றுள்ளார்.

இதன்போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறின் போது தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபர் குறித்த பெண்ணை வெட்டிக் கொலை செய்துவிட்டு கம்பளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இதனையடுத்து கம்பளை பொலிஸார் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

5 glas
தரம் 5 புலமைப் பரீட்சை பெறுபேர்களுக்காக காத்திருக்கும் 3,07959 மாணவர்கள்
New Project t (13)
செம்மணி மனித புதைகுழி வழக்கில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்!
exam
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்: வெளியான முக்கிய அறிவிப்பு!
New Project t (11)
யாழில் தண்டவாளத்தை கடக்க முற்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!
New Project t (9)
விடுதலைப் புலிகளின் தங்கம் தொடர்பில் சிஐடியினர் வெளியிட்ட தகவல்!
New Project t (7)
வீதியில் காரை நிறுத்தி மக்களுக்கு “ஹாய்” சொன்ன ஜனாதிபதி அநுர: வைரலாகும் காணொளி!