கெஹெலிய ரம்புக்வெலவின் மூத்த மகள் கைது !

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று ( 6) கைது செய்யப்பட்டுள்ளார்.

300 இலட்சம் ரூபா பணத்தைச் சட்டவிரோதமான முறையில் பரிமாற்றம் செய்தமை மற்றும் சொத்துக்களைக் குவித்தமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

,இதேவேளை, கடந்த ஆண்டு 16 வங்கிக் கணக்குகளில் ரூ. 90 மில்லியனுக்கும் அதிகமான வைப்புத்தொகையை சந்தேகத்திற்கிடமான முறையில் வைத்திருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.

ஏற்கனவே கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் ஏனைய மகள்கள் மீதும் இதேபோன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மூத்த மகளும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!