வெளிநாடொன்றில் நாடாளுமன்ற வளாகத்தில் உயிர்மாய்த்த எம்.பி!

பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உடல் அந்நாட்டு நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டின் சமூக ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் எமிலி பெல்டோனனின் (30) உடலே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அவர் நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் தவறான முடிவெடுத்து உயிரிழந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

இந்நிலையில், அவர் எங்கள் சமூகத்தின் மிகவும் நேசிக்கப்பட்ட உறுப்பினராக இருந்தார், நாங்கள் அவரை மிகவும் இழப்போம்.

ஒரு இளம் வாழ்க்கை மிக விரைவாக முடிந்துவிட்டது என்று சமூக ஜனநாயக நாடாளுமன்றக் குழுவின் தலைவரான டைட்டி துப்புரைனென் தெரிவித்துள்ளார்.

சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்றத்தின் அனைத்து அதிகாரப்பூர்வ அலுவலகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!