மட்டக்களப்புக்கு சென்ற தொடருந்திலிருந்து மீட்க்கப்பட்ட மர்ம பொதி!

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் கைவிடப்பட்ட பையில் இருந்து 200 கிராம் ஜஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (19) மாலை 4.10 மணியளவில் மட்டக்களப்பு ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சந்தேகத்திற்கிடமான பையை கண்டுபிடித்து, அதனை புகையிரத அதிபரிடம் ஒப்படைத்தனர்.

பையைத் திறந்து பரிசோதித்தபோது, 252 சிறிய பெக்கெட்டுகளில் பொதி செய்யப்பட்ட 200 கிராம் போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை இதனைத் தொடர்ந்து குறித்த போதைப் பொருளை கைப்பற்றிய பொலிஸார் நீதிமன்றத்தில் அதனை ஒப்படைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!