தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கிகள் : வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்

மித்தெனியப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதக் களஞ்சியசாலையில் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட T56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டக்கள், வெள்ளவத்தை – ஹேவ்லொக் சிட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T56 துப்பாக்கி தொடர்பில் ஒற்றுமை இருக்கிறதா என்பதில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பெண்களிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆயுதம், பின்னர் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு தொடர்பு இருப்பதாக அவர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரிக்கப்பட்டு வருகிறது, முன்னாள் அமைச்சர் மற்றும் சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

மித்தெனியப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட T56 தோட்டாக்களில், ‘K.P.I’ என்ற எழுத்துக்கள் குறிக்கப்பட்டிருந்தது.

இந்த அடையாளங்கள் கடந்த ஆண்டு ஜூலை 8 ஆம் திகதி கிளப் வசந்த என்ற சுரேந்திர வசந்த பெரேராவின் கொலையுடன் தொடர்புடைய குறியீடுகள் ஆகும்.

‘K.P.I’ என்பது பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி காஞ்சிபாணி இம்ரானுடயது என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி மித்தெனியவுக்கு அழைத்து வரப்பட்டதை அடுத்து இந்த ஆயுத களஞ்சியம் கண்டுபிடிப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!