கிளிநொச்சி – தட்டுவான் கொட்டி பகுதியில் இன்றும் வெடிக்காத நிலையில் வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நேற்றையதினம் பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இரு நபர்கள் தமது பணியினை தொடர்ந்த போது நிலத்திற்கு கீழ் இருந்த குண்டு வெடித்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் தட்டுவான் கொட்டி பகுதி முழுவதும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது வெடிக்காத நிலையில் வெடி குண்டுகள் காணப்பட்டன.
இந்நிலையில் அதனை மீட்பதற்கு நீதிமன்றத்தின் உத்தரவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.