பொலித்தீன் பைகளின் பாவனை: நுகர்வோர் விவகார அதிகார சபையின் அறிவிப்பு

விற்பனை நிலையங்களில் இலவசமாக வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு, நவம்பர் 1 முதல் பணம் செலுத்த வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பொலித்தீன் பைகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு புதிய விதிமுறைகளின் ஒரு பகுதியாக, நவம்பர் 1 முதல் வர்த்தக நிலையங்களில் பொருட்களை வாங்கும் போது அதற்காக பெற்றுக் கொள்ளும் பைகளுக்கு பணம் செலுத்த வேண்டும்.

புதிய விதிமுறைகளின் கீழ், பொலித்தீன் பை என குறிப்பிடப்படும் பொலித்தீன் பைகள் இனி இலவசமாக வழங்கப்படாது.

அதன்படி, சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து பொருட்களை வாங்கும் போது வழங்கப்படும் ஒவ்வொரு பைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களால் சூழல் மாசடைதலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான தேசிய முயற்சிக்கு பங்களிக்கவும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகள் மற்றும் கொள்கலன்களைப் பயன்படுத்துமாறு அதிகார சபை நுகர்வோரை வலியுறுத்துகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran
ஹோர்முஸ் நீரிணையில் கொள்கலன் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை துப்பாக்கிச் சூடு!
Suresh Saleh
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுரேஷ் சலே நீதிமன்றில் ஆஜர்!
iran
தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும்: அமெரிக்காவிற்கு ஈரான் ராணுவம் பகிரங்க எச்சரிக்கை
suriya movie shoot
கொழும்பில் படமாக்கப்படவிருந்த இந்தியத் திரைப்படத்தில் சூர்யாவுடன் நடிக்கவிருந்த இலங்கை கலைஞர் திடீரென உயிரிழப்பு!
MT Tifani
இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் ஈரான் ஆதரவு கப்பல் இடைமறிப்பு: அமெரிக்கப் படைகள் அதிரடி சோதனை!
vavuniya
வவுனியாவில் இளைஞர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட குழு: பொலிசார் தீவிர விசாரணை!