விமான நிலையத்திற்குள் அனுமதியின்றி நுழைந்தவருக்கு ஏற்பட்ட கதி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள Air Cargo Village பகுதிக்குள் அனுமதியின்றி மோட்டார் வாகனத்தில் நுழைந்த ஒருவர் விமானப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் தம்புத்த, பாலுகம பிரதேசத்தை சேர்ந்தவராகும். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் குடிபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அனுமதியின்றி மோட்டார் வாகனத்தில் Air Cargo Village பகுதிக்குள் நுழைந்தமைக்கான காரணத்தை கண்டுபிடிக்கும் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vehicles
2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகளால் மேலதிக வருமானம்!
india
யாழை வந்தடைந்தார் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன்!
passports
வீதியோரத்தில் இருந்து மீட்க்கப்பட்ட கடவுச்சீட்டுகள்!
jaffna university
யாழ். பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயல்களில் தலையிட்டதில்லை - ரஜீவன் எம்.பி
maldives
மாலைத்தீவில் கைதான இலங்கையர்கள்: நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்
jaffna sea
யாழ். தாளையடி கடற்பகுதிக்கு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!