இலங்கையில் கடமையின்போது உயிரிழந்த மற்றுமொரு அதிகாரி!

குருணாகல் பகுதியில் நேற்று இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்பவியலாளர் ஒருவர் கடமையின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

பொவத்த – வீரபொக்குண வீதியில் சேதமடைந்த குறைந்த மின்னழுத்த மின் இணைப்பைப் பழுதுபார்க்கும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம்
நேர்ந்துள்ளது.

மின்சாரம் தாக்கியதில் பாதிக்கப்பட்ட 41 வயதுடைய குறித்த நபர், வீரபொக்குண ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தின் பின்னர் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தம்புள்ளையில் தற்காலிக ஊழியராக 2007 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கிய இவர், 2017 ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபையின் நிரந்தரப் பணியாளரானார்.

அண்மையில் ஹெட்டிப்பொல உப மின் நிலையத்துடன் இணைக்கப்பட்ட இவர், அர்ப்பணிப்புடன் கடமையாற்றி ஒருவரென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Karu Jayasuriya
முன்னாள் சபாநாயகர் ஜனாதிபதி அநுரவுக்கு அவசர கடிதம்!
docter
மக்களை ஏமாற்றிவந்த போலி மருத்துவர்: சுற்றி வளைத்த அதிகாரிகள்
t20
யாழ்ப்பாணம் வருகிறது T20 உலகக்கிண்ணம்!
colombo
இவர் தொடர்பில் விபரம் தெரிந்தால் உடனே அழையுங்கள்!
Singer S
பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் காலமானார்!
vairamuthu
கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு!