இளையோர் உலகக்கிண்ண அணியில் இடம்பிடித்த யாழ் வீரர்!

19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவனான குகதாஸ் மாதுளன் என்பவரே இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை குழாத்தை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு பெயரிட்டுள்ளது.

அந்தவகையில் இந்த அணியில் இலங்கையின் சில பாடசாலைகளைச் சேர்ந்த 15 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, இந்த அணியின் தலைவராக கொழும்பு றோயல் கல்லூரி மாணவரான விமத் டின்சராவும் பிரதி தலைவராக கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி மாணவரான காவிய கமகே ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த அணியில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் வீரரும் தற்போது மருதானை புனித சூசையப்பர் கல்லூரியில் இணைந்துள்ளவருமான விக்னேஸ்வரன் ஆகாஷ் என்பவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த உலகக் கிண்ணத் தொடர் 2026 ஜனவரி 15 முதல் பெப்ரவரி 6 வரை நமீபியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.

இத்தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி இன்று (2026 .01.01) ஆம் திகதி நமீபியா நோக்கிப் புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்