மின்கம்பத்தில்  மோட்டார் சைக்கிள் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு!

அம்பாறை  உஹன பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட சமன பெத்த பிரிவேனா அருகே மோட்டார் சைக்கிள்  வீதியை  விட்டு விலகி உயர் மின்னழுத்த மின்கம்பத்தில்    மோட்டார் சைக்கிள் செலுத்தியவர்  உயிரிழந்தார்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை (25) மதியம்  இடம்பெற்றுள்ளதுடன்  குறித்த விபத்தில் காயமடைந்தவர் மற்றுமொரு  வாகனத்தில் அம்பாறை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர்  இலங்கை இராணுவத்தின் முல்லைத்தீவு முகாமில் பணியாற்றும், 22 வயதுடைய  ஆர்.எச். உதிக மலிந்த ரணசிங்க என்ற இராணுவ வீரர் ஆவார்.

குறித்த இராணுவ  வீரர் விடுமுறையில் பொலன்னறுவைக்குச் சென்று பின்னர்  மஹியங்கனையில் உள்ள தனது பாட்டியைப் பார்த்துவிட்டு அம்பாறை  பொல்வத்தைக்குத் செல்லும் வழியில் விபத்திற்குள்ளாகியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் அம்பாறை மாவட்ட   பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் அறிவுறுத்தலின் பேரில் உஹன பிரிவுக்குப் பொறுப்பானவிற்கான  உதவி பொலிஸ் அத்தியட்சகர்  டி.எம். திசாநாயக்கவின் மேற்பார்வையின் கீழ்  உஹன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  தலைமைப் பொலிஸ் பரிசோதகர் சுமித் குணவர்தன உள்ளிட்ட போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!