மின்கம்பத்தில்  மோட்டார் சைக்கிள் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு!

அம்பாறை  உஹன பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட சமன பெத்த பிரிவேனா அருகே மோட்டார் சைக்கிள்  வீதியை  விட்டு விலகி உயர் மின்னழுத்த மின்கம்பத்தில்    மோட்டார் சைக்கிள் செலுத்தியவர்  உயிரிழந்தார்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை (25) மதியம்  இடம்பெற்றுள்ளதுடன்  குறித்த விபத்தில் காயமடைந்தவர் மற்றுமொரு  வாகனத்தில் அம்பாறை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர்  இலங்கை இராணுவத்தின் முல்லைத்தீவு முகாமில் பணியாற்றும், 22 வயதுடைய  ஆர்.எச். உதிக மலிந்த ரணசிங்க என்ற இராணுவ வீரர் ஆவார்.

குறித்த இராணுவ  வீரர் விடுமுறையில் பொலன்னறுவைக்குச் சென்று பின்னர்  மஹியங்கனையில் உள்ள தனது பாட்டியைப் பார்த்துவிட்டு அம்பாறை  பொல்வத்தைக்குத் செல்லும் வழியில் விபத்திற்குள்ளாகியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் அம்பாறை மாவட்ட   பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் அறிவுறுத்தலின் பேரில் உஹன பிரிவுக்குப் பொறுப்பானவிற்கான  உதவி பொலிஸ் அத்தியட்சகர்  டி.எம். திசாநாயக்கவின் மேற்பார்வையின் கீழ்  உஹன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  தலைமைப் பொலிஸ் பரிசோதகர் சுமித் குணவர்தன உள்ளிட்ட போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!