நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களில் காவல்துறை அதிரடி நடவடிக்கை!

நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் காவல்துறையினரின் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறை மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய, அனைத்து காவல் நிலையங்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் நீண்ட வரிசைகளுக்கு மத்தியில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தீர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, பீப்பாய்கள், அதிக கொள்ளளவான போத்தல்கள் ஆகியவற்றில் எரிபொருளை நிரப்பக்கூடாது என, நிரப்பு நிலையங்களுக்கு ஏற்கனவே அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புகளை மீறுவோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, துறைசார் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், எரிபொருளைப் பதுக்குவோர் தொடர்பில் நாடளாவிய ரீதியில் புலனாய்வுத் துறையினர் சோதனைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!