பெண் ஊழியரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்!

ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை தொடருக்காக இலங்கைக்கு வருகை தந்திருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவருக்கு, தங்கியிருந்த விடுதியில் பெண் ஊழியர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டமைக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கண்டி, பல்லேகலை பகுதியில் உள்ள ‘கோல்டன் கிரவுன்’ (Golden Crown) நட்சத்திர விடுதியில் பாகிஸ்தான் அணி தங்கியிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அணிக்கு எதிரான சுப்பர்-8 சுற்றுப் போட்டிக்கு முன்னதாக, விடுதியில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரிடம் குறித்த வீரர் அநாகரீகமாக நடந்துகொண்டுள்ளார்.
இதனால் அச்சமடைந்த அந்தப் பெண் உதவி கோரி சத்தமிட்டதையடுத்து, ஏனைய ஊழியர்கள் அங்கு வந்து அவரை மீட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் விடுதியின் நிர்வாகம் பாகிஸ்தான் அணியின் முகாமையாளர் நவீட் சீமாவிடம் (Naveed Cheema) முறையிட்டது.

விடுதியின் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய போதிலும், முகாமையாளர் வீரர் சார்பாக மன்னிப்பு கோரியதுடன், அவருக்கு அபராதமும் விதித்து விடயத்தை அப்போது சுமுகமாக முடித்து வைத்துள்ளார்.

குறித்த வீரரின் பெயர் விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், பாகிஸ்தான் திரும்பியதும் அவர் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் ஒழுக்காற்று குழு முன்னிலையில் முன்னிலையாக வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் அணி இந்தத் தொடரில் அரையிறுதிக்குத் தகுதிபெறாமல் வெளியேறியுள்ள நிலையில், இவ்வாறான ஒழுக்கவீனச் சம்பவங்கள் அந்த நாட்டு கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!