ஆட்பதிவுத் திணைக்களம் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல் காரணமாக நாளை 17 ஆம் திகதி பொதுமக்களுக்கான எந்தவித சேவைகளும் முன்னெடுக்கப்பட மாட்டாது என ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் நாடளாவிய ரீதியிலுள்ள ஏனைய பிராந்திய அலுவலகங்களிலும் நாளை பொதுமக்களுக்கான சேவைகள் முன்னெடுக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமக்கான சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக, நாளைய தினம் தமது அலுவலகங்களுக்கு வருகைதர வேண்டாம் என ஆட்பதிவுத் திணைக்களம் அறிக்கை ஒன்றினூடாக பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும், விரைவில் அதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

covid 19
மீண்டும் பரவும் கொவிட்-19 பாதிப்பு: நான்கு பேர் உயிரிழப்பு
Ragitha Rajapaksa
விஜயதாசவின் புதல்வர் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரினதும் விளக்கமறியல் நீடிப்பு!
jaffna kings
விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு: Jaffna கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் கைது!
ramanathan archchuna
அருச்சுனா கூட்டத்தில் வெளியேற்றப்பட்டமை தவறு - ரஜீவன் எம்.பி தெரிவிப்பு!
archchcuna
கிளிநொச்சி கூட்டத்தில் நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்டது யார்?
Former IGP C.D
ராஜபக்சாக்களின் நிழலாக இருந்த முன்னாள் IGP சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!