அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!

மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ள சந்தர்ப்பத்தில், அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பலை அமெரிக்கா தாக்கி, பின்னர், அந்த கப்பலை முழுமையாக அமெரிக்கா அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததற்கு நேரடி பதிலடியாக, இந்த ட்ரோன் தாக்குதலை ஈரான் நடத்தியதாக ஈரான் தஸ்னிம் ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரான் அமெரிக்க கப்பல்களின் மீது நடத்திய தாக்குதலின் முழு விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. தாக்கிய ஈரான் ட்ரோன்களின் எண்ணிக்கை, தாக்கப்பட்ட அமெரிக்க இராணுவ கப்பல்களின் எண்ணிக்கை, அவற்றில் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய அறிக்கையினை தஸ்னிம் பின்னர் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த Touska என்ற ஈரானிய கப்பல் மீது தாக்குதல் நடத்தி, அதனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக அமெரிக்க இராணுவம் அறிவித்திருந்தது.

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமெரிக்கா விதித்திருந்த கடற்படை முற்றுகையை அந்தக் கப்பல் மீற முயன்றதாகவும் தற்போது Touska கப்பல் அமெரிக்க கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் ட்ரம்ப் கூறியிருந்தார்.

அதற்கு தகுந்த பதில் தாக்குதல் நடத்தும் விதமாகவே, தற்போது அமெரிக்க இராணுவ கப்பல்களை தாக்கியிருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

hatton
ஹட்டன் டிக்கோயா இரட்டைக் கொலையாளி இன்று அதிகாலை தப்பியோட்டம்!
arrest
3 வருடங்களுக்கு முன் நடந்த இரட்டைக் கொலை: தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் கைது
jaffna news
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் ஆராய்வு!
arrest
19 நாட்களேயான கைக்குழந்தையை 1 லட்சத்திற்கு விற்க முயன்ற 6 பேர் கைது!
death
கல்விச் சுற்றுலாவில் நேர்ந்த பெரும் சோகம்: மாணவியைக் காப்பாற்ற முயன்ற கணித ஆசிரியர் உயிரிழப்பு!
iran
தெற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!