அமெரிக்காவுடனான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை தொடர்பில் ஈரான் வெளியிட்ட தகவல்!

அமெரிக்காவுடனான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதா இல்லையா என்பது குறித்து ஈரான் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான திட்டங்கள் எதுவுமில்லை, இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ஊடகப்பேச்சாளர் இஸ்மாயில் பாகாய் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இன்று மாலை திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளுக்காக, அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) தலைமையிலான தூதுக்குழு ஒன்றை பாகிஸ்தானுக்கு அனுப்புவதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் மத்திய கிழக்கு தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அவரது மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் இதில் கலந்துகொள்ளவிருந்தனர்.

கடற்படை முற்றுகை என்று சொல்லப்படுபவை தொடர்வதாலும், போர்நிறுத்த மீறல்கள் மற்றும் அமெரிக்காவின் அச்சுறுத்தும் பேச்சுக்கள் காரணமாகவும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் திட்டம் அதிகாரிகளுக்கு இல்லை என ஈரானிய அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

hatton
ஹட்டன் டிக்கோயா இரட்டைக் கொலையாளி இன்று அதிகாலை தப்பியோட்டம்!
arrest
3 வருடங்களுக்கு முன் நடந்த இரட்டைக் கொலை: தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் கைது
jaffna news
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் ஆராய்வு!
arrest
19 நாட்களேயான கைக்குழந்தையை 1 லட்சத்திற்கு விற்க முயன்ற 6 பேர் கைது!
death
கல்விச் சுற்றுலாவில் நேர்ந்த பெரும் சோகம்: மாணவியைக் காப்பாற்ற முயன்ற கணித ஆசிரியர் உயிரிழப்பு!
iran
தெற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!