தமிழக சட்டமன்ற தேர்தல்: முதல் 2 மணி நேரத்தில் 1 கோடிக்கும் அதிகமானோர் வாக்குப்பதிவு!

தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 17.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், கடந்த முறையை விட அதிகமாக வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே வரிசையில் நின்று மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 17.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமானாலும் 2 மணிநேரத்தில் தமிழகத்தில் 1 கோடிக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், இதில் 17.69 சதவீதம் பேர் அதாவது 1 கோடி 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வாக்குப்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை 11 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 37.56 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Namal and Mahinda
"18ஆவது திருத்தம் நாங்கள் செய்த தவறு; அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம்!" - நாமல் ராஜபக்ச
police arrest
தெஹிவளை உணவகக் கொள்ளை: முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்குக் கடூழிய சிறை!
negombo prison
தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: நீர்கொழும்பு சிறை அதிகாரி சாட்சியத்தை வெளியிட நீதிமன்றம் தடை!
telegram
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை: ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
accident
A9 வீதியில் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி: இரு இளைஞர்களின் உயிரைப் பறித்த சோகம்!
pillayan
'பிள்ளையான்' தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு: விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு!