புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட மோதல்: பொலிஸ் அதிகாரி பரிதாபமாக உயிரிழப்பு!

வலஸ்முல்ல, போவல பகுதியில் நடைபெற்ற சித்திரை புத்தாண்டு விழாவின் இறுதியில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த, வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புத்தாண்டு விழா நடைபெற்ற இடத்தை சுத்தம் செய்துகொண்டிருந்த தனது சகோதரனை ஒரு குழுவினர் தாக்குவதாகக் கிடைத்த தகவலையடுத்து, அவர் தனது காரில் அந்த இடத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கு தனது சகோதரனைக் காப்பாற்ற முயன்றபோது, எதிர்த்தரப்பைச் சேர்ந்த ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட கூர்மையான ஆயுதத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து அவர் வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கும், அதன் பிறகு கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டார்.

இதன்படி, அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (24) அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக வலஸ்முல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், உயிரிழந்த அதிகாரியின் இறுதிக்கிரியைகள் நாளை (26) பொலிஸ் மரியாதையுடன் நடைபெறவுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vijay
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
iran
அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
trump
நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால் மீண்டும் குண்டுவீச்சு தாக்குதல்கள் நடத்தப்படும்: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
iran
ஏழு வாரத்திற்கு பின்னர் ஈரானின் வான்பரப்பு பகுதியளவில் மீண்டும் திறப்பு!
batticaloa
மட்டக்களப்பில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தாய் உயிரிழப்பு!
Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!