கல்வித் தகுதி மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகளில் முறைகேடு: இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் யோஷித ராஜபக்ஷ!

கடற்படையில் லெப்டினன்ட் (Lieutenant) அதிகாரியாகப் பணியாற்றியதாகக் கூறப்படும் யோஷித ராஜபக்ஷ, சட்டப்பூர்வ நடைமுறைகளுக்குப் புறம்பாகப் பிரித்தானியக் கடற்படைப் பயிற்சிக்கு எவ்வாறு பங்கேற்றார் என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக, எதிர்வரும் 16-ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

2006 டிசம்பர் 14-ஆம் திகதி கடற்படையில் இணைந்துகொண்ட யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராக ஆணைக்குழுவிற்குப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவை குறித்த விசாரணைகளுக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடற்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டபோது சமர்ப்பித்த கல்வித் தகுதிகள் மற்றும் கடற்படையில் அவருக்கு வழங்கப்பட்ட வெளிநாட்டுப் பயிற்சிப் பாடநெறிகள் ஆகியவை சட்டத்திற்கு முரணாக இடம்பெற்றதாகக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் இந்த விசாரணைகளை ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
கிளிநொச்சியில் இளம் கலைஞர் கைது: அரசின் இரட்டை நிலைப்பாட்டைச் சாடும் நாமல் ராஜபக்ஷ!
vavuniya
மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்: வவுனியா 'சிறுவர் பாதாளக் குழு' சிக்கியது! 7 பேருக்கு நீதிமன்ற உத்தரவால் சிறுவர் இல்லத்தில் அடைப்பு!
arrest
எழுச்சி பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் பகிர்ந்த கிளிநொச்சி சொல்லிசை கலைஞன் கைது!
vavuniya accident
கனகராயன் குளத்தில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!
chennai srilankan girl death
சென்னை கோயம்பேடு கொடூரம்: காரில் மோதி இலங்கை பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுமியும் பலி
gotabaya rajapaksa
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் - கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை