சமகால அரசியல் மற்றும் செம்மணி புதைகுழி தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களுடன் தமிழ் பிரதிநிதிகள் கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பு நேற்றைய தினம் (21.07.2026) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள விடுதியொன்றில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்ப்பாணம் மாநகர மேயர் வி.மதிவதனி மற்றும் பல கட்சிகளின் யாழ். மாநகர சபை உறுப்பினர்கள், நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் மயூரன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் கலாநிதி க.சர்வேஸ்வரன் உள்ளிட்ட பல பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சமகால அரசியல் நிலவரம், செம்மணியில் அகழப்படும் மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளில் சர்வதேச நாடுகளின் பங்கு மற்றும் பங்களிப்பு குறித்து இதன்போது விசேடமாகப் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna
யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் வெற்றுக்காணிகளை சுருட்டும் கும்பல்: பொலிஸார் விசாரணை!
india
மிக்ஸர் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கிய வேர்க்கடலை: 3 வயது சிறுவன் உயிரிழப்பு!
anuradhapura
அனுராதபுரத்தில் கோர விபத்து: இருவர் பலி; கர்ப்பிணிப் பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
nalinda jayatissa
சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதல்: 200 பேரிடம் விசாரணை - பின்னணியில் உள்ளவர்களை வேட்டையாட 8 குழுக்கள் அமைப்பு!
police sri lanka
'அபராதம் செலுத்துமாறு' வரும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸார்
sri lankan food
சர்வதேச உணவு சுற்றுலாத் தரவரிசை 2026: டாப் 50 பட்டியலில் இடம்பிடித்தது இலங்கை!