சிறைச்சாலை பேருந்தை இரகசியமாக வீடியோ எடுத்த பெண் கைது: நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு!

உடுகம நீதவான் நீதிமன்றத்திற்குச் சந்தேகநபர்களை அழைத்துச் சென்று கொண்டிருந்த சிறைச்சாலை பேருந்து ஒன்றை தனது கைத்தொலைபேசி மூலம் இரகசியமாக காணொளி பதிவு செய்து கொண்டிருந்த பெண் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் உடுகம நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால் நின்று, தனது கைத்தொலைபேசியை மறைத்து வைத்துக்கொண்டு இரகசியமாக இந்தச் சிறைச்சாலை பேருந்தைக் காணொளி பதிவு செய்துள்ளதாக உடுகம பொலிஸார் தெரிவித்தனர்.

உடுகம பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏதேனும் குற்றத்தைச் செய்யும் நோக்கத்துடன் இவர் இவ்வாறு காணொளி பதிவு செய்தாரா என்பது குறித்துப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபரான பெண்ணின் மகன் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பெண் உடுகம முதன்மை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஓகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Harshana Nanayakkara
செம்மணி புதைக்குழி: உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி – நீதி அமைச்சர்!
australia
"தற்காப்பு எனக்கூறி தலையில் தாக்குவதா?" — இலங்கை வம்சாவளி இளைஞருக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் சிறை தண்டனை!
anura
அரச செலவைக் குறைக்க நடவடிக்கை: 5 ஜனாதிபதி மாளிகைகள் சுற்றுலாத்துறைக்குக் குத்தகைக்கு!
ShakthiSAT
ShakthiSAT சர்வதேச விண்வெளி திட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 18 வயது மாணவி!
vavuniya
வவுனியாவில் சோகம்: ஊஞ்சல் தடி முறிந்து விழுந்து 5 மாதக் குழந்தை பரிதாப பலி!
Chaminda Wijesiri
2019 பண்டாரவளை பொலிஸ் மோதல் வழக்கு: பதுளை எம்.பி சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை!