அராலி ஐயனார் ஆலயத்தில் அதிசயம்: நிலமட்டத்தைத் தாண்டிப் பெருக்கெடுக்கும் கிணற்று நீர்!

அராலி கிழக்கு, மலையாளங்காடு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு மற்றும் அதனை அண்டியுள்ள மேலும் சில கிணறுகள் வழக்கத்துக்கு மாறாக பெருக்கெடுத்துள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பகுதியில் உள்ள ஐயனார் ஆலய காணியில் உள்ள கிணறானது நில மட்டத்திற்கு மேலே தண்ணீர் வந்த நிலையில் கிணற்றில் இருந்து வெளியேறிய வண்ணம் உள்ளது.

அத்துடன் அதனை அண்டிய மேலும் ஒரு கிணறானது நில மட்டத்திற்கு தண்ணீர் மட்டம் வந்துள்ளதையும், ஏனைய இரண்டு கிணறுகள் வழமைக்கு மாறாக நீர் மட்டம் உயர்ந்து உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளின் தண்ணீரானது நன்னீராக மாறியுள்ளதுடன், ஒரு கிணற்றின் தண்ணீர் மிதமான சூட்டுடன் இருப்பதை உணர முடிகிறது.

இது குறித்து அந்த ஊரில் உள்ளவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த கிணறுகளில் இந்த மாதங்களில் நீர்மட்டம் மிகவும் குறைவாகவே காணப்படும். குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காது. மூன்று அல்லது நான்கு பேர் குளித்தாலேயே கிணற்றில் உள்ள தண்ணீர் முடிந்து விடும்.

இவ்வாறான சூழ்நிலையில் வழமைக்கு மாறாக நீர்மட்டம் உயர்ந்துள்ளமை ஐயனாரின் புதுமை என்றே நாங்கள் பார்க்கின்றோம். எமது கிராமத்திற்கு எந்தவிதமான தீங்கும் வராமல் காக்க வேண்டும் என்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!