கனடா அனுப்புவதாக கூறி மக்களை ஏமாற்றிவந்த கும்பல்: சுற்றிவளைத்து பிடித்த பொலிஸார்

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பொதுமக்களை நிதி ரீதியாக ஏமாற்றியதாக மூன்று சந்தேக நபர்கள் பம்பலப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பம்பலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகளால் நேற்று (25) போலி விசா ஸ்டிக்கருடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொரளையைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும், கோனகங்கார மற்றும் பொரளைப் பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 68 வயதுடைய இரண்டு பெண்களும் ஆவர்.

கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி, ஒரு பெண் சந்தேக நபர் ரூ. 3,831,000 மற்றும் ரூ. 3,436,000 மோசடி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இதேபோன்ற பிற மோசடிகளில் ஈடுபட்டார்களா என்பதைக் கண்டறிய பம்பலப்பிட்டி பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

negombo prison
கடமையின் போது உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மரணத்தின் பின் பதவி உயர்வு; தலா 5 இலட்சம் இழப்பீடு!
colombo
பறவை மோதியதால் அவசர நிலை: கட்டுநாயக்கவில் 246 பயணிகளுடன் பாதுகாப்பாகத் தரையிறங்கிய துருக்கி விமானம்!
anura kumara dissanayake
பொதுமக்களுக்கோ அரசாங்கத்துக்கோ பயனற்ற நிறுவனங்களை மூட ஜனாதிபதி உத்தரவு!
prison
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே மோதல்; இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
jaffna
யாழ்ப்பாணத்தில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை: காரில் வாள்கள், ஐஸ் போதைப்பொருளுடன் 5 பேர் கைது!
buddhist monk
"சிறுமிகளுக்கு நேரும் கொடூரம்; மதத்தலைவர்கள் தப்பி ஓட சட்டம் இடமளிக்கலாமா?"