கனடா அனுப்புவதாக கூறி மக்களை ஏமாற்றிவந்த கும்பல்: சுற்றிவளைத்து பிடித்த பொலிஸார்

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பொதுமக்களை நிதி ரீதியாக ஏமாற்றியதாக மூன்று சந்தேக நபர்கள் பம்பலப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பம்பலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகளால் நேற்று (25) போலி விசா ஸ்டிக்கருடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொரளையைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும், கோனகங்கார மற்றும் பொரளைப் பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 68 வயதுடைய இரண்டு பெண்களும் ஆவர்.

கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி, ஒரு பெண் சந்தேக நபர் ரூ. 3,831,000 மற்றும் ரூ. 3,436,000 மோசடி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இதேபோன்ற பிற மோசடிகளில் ஈடுபட்டார்களா என்பதைக் கண்டறிய பம்பலப்பிட்டி பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்