கனடா அனுப்புவதாக கூறி மக்களை ஏமாற்றிவந்த கும்பல்: சுற்றிவளைத்து பிடித்த பொலிஸார்

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பொதுமக்களை நிதி ரீதியாக ஏமாற்றியதாக மூன்று சந்தேக நபர்கள் பம்பலப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பம்பலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகளால் நேற்று (25) போலி விசா ஸ்டிக்கருடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொரளையைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும், கோனகங்கார மற்றும் பொரளைப் பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 68 வயதுடைய இரண்டு பெண்களும் ஆவர்.

கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி, ஒரு பெண் சந்தேக நபர் ரூ. 3,831,000 மற்றும் ரூ. 3,436,000 மோசடி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இதேபோன்ற பிற மோசடிகளில் ஈடுபட்டார்களா என்பதைக் கண்டறிய பம்பலப்பிட்டி பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!