முன்னாள் ஜனாதிபதி ரணிலின் மற்றுமொரு மோசடி அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மோசடியாக வழங்கிய ஐந்து ஏக்கர் காணியை அரசு திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழுள்ள விகாரகல தோட்டத்திற்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் காணியை, விடுமுறை விடுதி கட்டுவதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு (GMOA) குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காணி உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாமல் கைமாற்றப்பட்டுள்ளது.மேலும் குத்தகை நிபந்தனைகளும் மீறப்பட்டதால், காணியை மீள கையகப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் காணி (24.05.2023) அன்று குத்தகை பத்திரம் மூலம் 30 வருட காலத்திற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

ஏக்கருக்கு சுமார் (50,000) ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பீட்டில் குத்தகைக்கு விடப்பட்ட இந்தக் காணி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குத்தகை விதிமுறைகளை பூர்த்திச் செய்யத் தவறியதால், சமீபத்தில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காணி அமைந்துள்ள பகுதி, தியலும நீர்வீழ்ச்சி உட்பட பல முக்கிய சுற்றுலா தலங்களுக்கு அருகில் அமைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

current bill
மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
iran
ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் - நீதவான் பிறப்பித்த அதிரடி உத்தரவு
food prices
இன்று நள்ளிரவு முதல் அதிரடியாக அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலைகள்!
airport arrest
கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதான இரண்டு கனேடியர்கள்!
arrest
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது!
jaffna news
யாழில் கடந்த வருடத்தில் மாத்திரம் 62 கோடி ரூபாய் மோசடி - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை