நள்ளிரவில் நடக்கும் சம்பவங்கள்.. ஏர் இந்தியா விமான விபத்தில் தப்பித்தவருக்கு இப்படி ஒரு நிலையா?

லண்டனை நோக்கி கடந்த மாதம் 12ஆம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கிளம்பிய சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த பயங்கரமான விமான விபத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர் என்பதையும், அது நாட்டெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது என்பதையும் மறக்க முடியாது.

விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் விஸ்வாஸ், இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். பயங்கர கனவுகள், நள்ளிரவில் திடீரென எழுதல், தூக்கம் இழத்தல் போன்ற அழுத்தமான மனநிலைகள் தொடர்ச்சியாக அவரை வாட்டி வருகிறது.

அவருடன் பயணித்த மற்றொரு சகோதரர் உயிரிழந்ததின் துயரம் மற்றும் விமானம் விபத்திலிருந்து தப்பிய அதிர்ச்சி, விஸ்வாஸை இன்னும் சீராக வாழ விடாமல் வைத்துள்ளது. வெளிநாடுகளில் இருக்கும் உறவினர்கள் அவரது நிலையை பற்றிச் சொல்வதற்கே பயப்படுவதாகவும், யாரிடமும் பேச முடியாமல் தவிக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அவரது மனநிலையை பார்த்த சில மருத்துவ நிபுணர்கள், இது ஒரு வகை மனஅழுத்தம் எனக் கூறி, அவருக்கு சிகிச்சை தேவை என்று வலியுறுத்தியுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Trump and Netanyahu
ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோரின் தோற்றத்தை ஒத்த எருமைகள்: ஈர்க்கப்படும் மக்களின் கவனம்
Commander-in-Chief Admiral Professor Jayanath Kolambage
இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் சீனாவின் ‘ஆயுத சூப்பர் மார்க்கெட் ’ ரகசியம்: முன்னாள் கடற்படை தளபதி வெளிப்படுத்திய உண்மைகள்!
Gajendrakumar Ponnambalam
மக்களின் காணிகளை இராணுவத்திற்கு பிடித்துக் கொடுக்க தேசிய மக்கள் சக்தி மும்மரமாக செயல்படுகிறது: கஜேந்திரகுமார் எம்.பி!
crime
பயணப்பொதியிலிருந்து 79 வயதுடைய மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு!
jaffna news
யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!
Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி