கோப்பாயில் இனந்தெரியாத குழுவினரால் தாக்குதல்: மூவர் வைத்தியசாலையில்!

இன்று (09) அதிகாலை சுமார் 02.30 மணியளவில், கோப்பாய் காவல் பிரிவு, கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் சென்று கற்கள், இரும்பு கம்பிகள் மற்றும் கூரிய ஆயுதங்களால் வீடு மற்றும் சொத்துக்களைத் தாக்கி சேதப்படுத்தினர்.

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சுமார் 03.45 மணிக்கு இது தொடர்பான முறைப்பாடு பெறப்பட்டதை அடுத்து விசாரணை தொடங்கப்பட்டது.

இந்த தாக்குதலில் காயமடைந்த மூவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் வீடு மற்றும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு கோப்பாய் பொலிஸ் நிலையத்தால் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Face book

Related Posts :

Special News :

Entertainment :

Special News

flood
பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!
srilanka
டித்வா புயல் தாக்கம் - மரணங்கள் 350 ஐ கடந்தது
tourist
இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!
anura
நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனம்!
water cut
.நீர்விநியோகம் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
al exam
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு