அவுஸ்திரேலிய வேலைவாய்ப்பு மோசடி: தொலைக்காட்சி நிறுவன மேலாளர் விளக்கமறியலில்!

அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகளால் நேற்று முன்தினம் அவிசாவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நபர்களிடமிருந்து தலா 25 முதல் 35 லட்சம் ரூபாய் வரை குறித்த நபர் பணம் பெற்றுள்ளார்.

அதற்கமைய, இவரால் மோசடி செய்யப்பட்ட மொத்தத் தொகை ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.

குறித்த சந்தேக நபருக்கு எதிராக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவுக்கு 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அவரை கைது செய்ய அதிகாரிகள் பலமுறை முயற்சி செய்தும், அவர் தொடர்ந்து அதிகாரிகளிடமிருந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இறுதியாக, தந்திரமாக செயல்பட்ட அதிகாரிகள், வெளிநாட்டு வேலை தேவை என்று கூறி அவரைத் தொடர்புகொண்டு, அவிசாவளை நகரில் வைத்து பெரும் முயற்சிக்குப் பிறகு கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர், இலங்கையின் முன்னணி தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் விற்பனை முகாமையாளராக பணியாற்றுபவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபருக்கு எதிராக அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் எட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பணியகத்தின் செல்லுபடியாகும் உரிமமின்றி வெளிநாட்டு வேலைகளுக்காக ஆட்களைச் சேர்த்தல் மற்றும் பண மோசடி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர், நேற்று அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna
யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் வெற்றுக்காணிகளை சுருட்டும் கும்பல்: பொலிஸார் விசாரணை!
india
மிக்ஸர் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கிய வேர்க்கடலை: 3 வயது சிறுவன் உயிரிழப்பு!
anuradhapura
அனுராதபுரத்தில் கோர விபத்து: இருவர் பலி; கர்ப்பிணிப் பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
nalinda jayatissa
சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதல்: 200 பேரிடம் விசாரணை - பின்னணியில் உள்ளவர்களை வேட்டையாட 8 குழுக்கள் அமைப்பு!
police sri lanka
'அபராதம் செலுத்துமாறு' வரும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸார்
sri lankan food
சர்வதேச உணவு சுற்றுலாத் தரவரிசை 2026: டாப் 50 பட்டியலில் இடம்பிடித்தது இலங்கை!