மன்னார் சௌத்பாரில் பரபரப்பு: அனுமதியின்றி DJI Mini 4 Pro ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன் பொலிஸாரால் கைது!

மன்னார் சௌத்பார் பகுதியில் வான் வழியே பறந்து உயர் தரமான புகைப் படங்களையும் வீடியோக்களையும் எடுக்க உதவும்   கருவியான ட்ரோன் கேமராவை   அனுமதியின்றி   பறக்க விட்ட சிறுவன் ஒருவர்  இன்று (9) ஞாயிற்றுக்கிழமை (9)    கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 பாதுகாப்பு அமைச்சில்  பதிவு செய்யப்படாத  ட்ரோன் ஒன்றை அனுமதியின்றி பறக்க விட்டதாக கூறப்படும் 16 வயது சிறுவன் ஒருவர்  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மன்னார் பொலிஸ்   புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே மன்னார் சௌத்பார்  பனங்கட்டுகொட்டு பகுதியில்  குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  கைது செய்யப்பட்ட குறித்த  சிறுவன் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் இடமிருந்து DJI Mini 4 Pro ரகத்தைச் சேர்ந்த ஒரு ட்ரோன் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(மன்னார் நிருபர்)

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna
அராலியில் நள்ளிரவில் துணிகரக் கொள்ளை: மின்சாரத் தடையைப் பயன்படுத்தி தங்க நகைகள் கொள்ளை!
Tran Alus
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து: டிரான் அலஸ் மீது விடுக்கப்பட்டுள்ள பாரிய ஊழல் குற்றச்சாட்டு
Akila Viraj Kariyawasam
கைது செய்யப்பட்ட அகில விராஜ் ஆகஸ்ட் 18 வரை விளக்கமறியல்!
Akila Viraj Kariyawasam
ஜனாதிபதி செயலக ஊழியர் நியமன முறைக்கேடு: முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!
Kaduwela bus  attack
கடுவெலையில் சொகுசுப் பேருந்துக்குத் தீவைத்த மர்ம நபர்கள்: ஓட்டுநர், நடத்துனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!
Nirojan Kulasingam
சமையல் உலகின் 'ஆஸ்கார்' பட்டியலில் முதல் ஈழத்தமிழர்: பாரிஸில் நிரோஜன் குலசிங்கம் மகுடம்!