கனடாவில் காலமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் இறுதி கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் , யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் முன்னாள் விரிவுரையாளரும், யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான ஆறுமுகம் சபேஸ்வரன் உடல்நல குறைவு காரணமாக கனடாவில் , தனது 47ஆவது வயதில் கடந்த 30ஆம் திகதி காலமானார்

அவரது பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு , நாளை மறுதினம் புதன்கிழமை அஞ்சலிக்காக கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இருக்கும்.
மறுநாள் வியாழக்கிழமை இறுதி கிரியைகள் இடம்பெற்று , தகன கிரியைகளுக்காக பூதவுடல் , கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் என குடும்பத்த்தினர் அறிவித்துள்ளனர்.
