கடலுக்குள் வீழ்ந்து சரக்கு விமானம் விபத்து!

ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற சரக்கு விமானமொன்று கடலுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

துருக்கி விமான சேவைக்கு (Air ACT) சொந்தமான போயிங் 747-481 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம், எமிரேட்ஸ் விமான சேவையின் EK9788 என்ற விமானப் பயணமாகத் துபாயிலிருந்து வந்துகொண்டிருந்தது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 03.50 மணியளவில், இது வடக்கு ஓடுபாதையில் தரையிறங்கும்போது, விமான நிலையத்தின் தரைப் பணியாளர்களின் வாகனத்துடன் மோதியுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்துத் திணைக்களம் (Civil Aviation Department) வெளியிட்ட அறிக்கையின்படி, விபத்தின் காரணமாக பணியாளர்கள் இருவர் கடலில் வீழ்ந்துள்ளனர்.

அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், பின்னர் அங்கு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

night sky
இலங்கையின் வான்பரப்பில் இன்று ஏற்படவுள்ள அதிசயம்!
ishara sewwandi
செவ்வந்தியின் வங்கிக் கணக்கு குறித்து வெளியான தகவல்!
arrest
30 கோடி ரூபாய் பெறுமதியான பொக்கிஷங்கள் மீட்பு!சந்தேக நபர் கைது
gold price today
ஒரே நாளில் சடுதியாக குறைந்த தங்கத்தின் விலை!
afghanistan cricket player
வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி!
ishara sewwandi
இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் காவல்துறை உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது!