மட்டக்களப்பில் சோகம்: போன் சார்ஜ் போட்டபடி தூங்கிய 19 வயது இளைஞர் பலி!

மட்டக்களப்பு – கல்குடா, கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்கத் தொலைபேசியை மின்னேற்றியவாறு (charge) மார்பில் வைத்துக்கொண்டு உறங்கிய இளைஞர் ஒருவர், தொலைபேசி வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 19 வயதுடைய இளைஞர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் சம்பவத்தன்று மாலை வீட்டில் உறங்குவதற்காகச் சென்றபோது, தனது கையடக்கத் தொலைபேசியை மின் இணைப்பில் மின்னேற்றியவாறு அதனை தனது நெஞ்சில் வைத்துக்கொண்டு உறங்கியுள்ளார்.

இந்த நிலையில், கையடக்கத் தொலைபேசி அதிக வெப்பமாகி வெடித்ததில் காயமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.

எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகக் காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, உயிரிழந்தவரின் உடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மருத்துவமனைப் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vavuniya
முதுமையைக் காட்டி தப்ப முடியாது! 12 வயது பேத்தியை தவறான முறைக்கு உட்படுத்திய 81 வயது முதியவருக்கு 15 ஆண்டுகள் சிறை
Sugeeswara Bandara
நரம்பு வெடித்துக் தீவிரமடைந்த பாதிப்பு: சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கை!
PineappleExport
இலங்கை ஏற்றுமதித்துறையில் புதிய சாதனை: பாகிஸ்தானுக்கு முதன்முறையாகச் செல்லும் அன்னாசிப்பழங்கள்
ChineseNationals
கொழும்பு துறைமுக நகர் கொலை சம்பவம்: சட்டவிரோதமாக தங்கியுள்ள 3 சீனர்களைக் கைது செய்ய பொதுமக்கள் உதவி தேவை
GoldStatue
2500 கோடி ரூபாய் அனுமான் சிலை வதந்தியா? அதிரடிப்படை நடத்திய சோதனையின் பின்னணி!
jaffna eye issue
பண்டத்தரிப்பு முருகன் ஆலய கண் பாதிப்புச் சம்பவம்: மின்குமிழ் உரிமையாளர் விளக்கமறியலில்!