🔴 VIDEO செம்மணி ஒரு கட்டுக்கதை! அரசாங்கத்தின் பதிலால் கொந்தளிக்கும் மக்கள்!

செம்மணியில் நடந்தது இன அழிப்பு தான் என்பதை தெளிவாக காட்டுவதுதான் செம்மணியில் மீட்கப்படுகின்ற மனித எலும்புக்கூடுகள். சோமரத்ன ராஜபக்ச என்ற மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் தெரிவித்திருக்கிறார் கொன்று தருவது அவர்களின் வேலை புதைப்பது எனது வேலை, கொல்வதும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று.

இதைப்பார்க்கும் போது ஒரு கொலைக்களம் ஒன்று அங்கே நடத்தப்பட்டிருக்கிறது.அந்த கொலைக்களத்திலே படு பாதகமான செயலை செய்த கடந்த அரசுகள் ,தமிழ் மக்களை ஒரு விலங்குகளாககூட மதிப்பதற்கு விருப்பமில்லை அந்தளவு அவர்களுடைய மனதிலே இனவெறி என்பது ஆழமாக ஊன்றி இருந்ததன் காரணத்தால் தான் இந்த செம்மணி என்ற புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது என பொதுமகன் ஒருவர் எமது ஊடகத்தால் செம்மணி புதைகுழி தொடர்பில் எடுக்கப்பட்ட மக்கள் கருத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இடைநிறுத்தப்பட்ட யாழ்.செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்று (21) மீள ஆரம்பமாகியுள்ளன.

முதலாம் கட்ட அகழ்வு மற்றும் இரண்டாம் கட்டத்தின் முதல் 15 நாள்கள் இடம்பெற்ற அகழ்வு என மொத்தமாக 24 நாள்கள் இடம்பெற்ற செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இருந்து இதுவரை 65 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் எமது ஊடகம் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

batticaloa
மட்டக்களப்பில் பரபரப்பு: மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதி!
weather alert srilanka
தீவிரம் அடையும் சீரற்ற வானிலை: பல மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு
basil
பசில் ராஜபக்சவுடையது என கூறப்பட்ட மல்வானை வீடு மாணவர்களால் சுற்றிவளைப்பு!
tvk
21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க தடை: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை
india
தமிழக சட்டசபை தேர்தல்: வாக்களித்த இலங்கையர் உள்ளிட்ட மூவர் மீது சட்ட நடவடிக்கை
vijay tvk
முதலமைச்சர் விஜய் நெற்றியில் உள்ள கறுப்பு திலகம்: இதன் பின்னணியில் உள்ள ரகசியம்