பொலித்தீன் பைகளின் பாவனை: நுகர்வோர் விவகார அதிகார சபையின் அறிவிப்பு

விற்பனை நிலையங்களில் இலவசமாக வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு, நவம்பர் 1 முதல் பணம் செலுத்த வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பொலித்தீன் பைகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு புதிய விதிமுறைகளின் ஒரு பகுதியாக, நவம்பர் 1 முதல் வர்த்தக நிலையங்களில் பொருட்களை வாங்கும் போது அதற்காக பெற்றுக் கொள்ளும் பைகளுக்கு பணம் செலுத்த வேண்டும்.

புதிய விதிமுறைகளின் கீழ், பொலித்தீன் பை என குறிப்பிடப்படும் பொலித்தீன் பைகள் இனி இலவசமாக வழங்கப்படாது.

அதன்படி, சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து பொருட்களை வாங்கும் போது வழங்கப்படும் ஒவ்வொரு பைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களால் சூழல் மாசடைதலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான தேசிய முயற்சிக்கு பங்களிக்கவும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகள் மற்றும் கொள்கலன்களைப் பயன்படுத்துமாறு அதிகார சபை நுகர்வோரை வலியுறுத்துகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Karu Jayasuriya
முன்னாள் சபாநாயகர் ஜனாதிபதி அநுரவுக்கு அவசர கடிதம்!
docter
மக்களை ஏமாற்றிவந்த போலி மருத்துவர்: சுற்றி வளைத்த அதிகாரிகள்
t20
யாழ்ப்பாணம் வருகிறது T20 உலகக்கிண்ணம்!
colombo
இவர் தொடர்பில் விபரம் தெரிந்தால் உடனே அழையுங்கள்!
Singer S
பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் காலமானார்!
vairamuthu
கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு!