சிறைச்சாலை பேருந்தை இரகசியமாக வீடியோ எடுத்த பெண் கைது: நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு!

உடுகம நீதவான் நீதிமன்றத்திற்குச் சந்தேகநபர்களை அழைத்துச் சென்று கொண்டிருந்த சிறைச்சாலை பேருந்து ஒன்றை தனது கைத்தொலைபேசி மூலம் இரகசியமாக காணொளி பதிவு செய்து கொண்டிருந்த பெண் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் உடுகம நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால் நின்று, தனது கைத்தொலைபேசியை மறைத்து வைத்துக்கொண்டு இரகசியமாக இந்தச் சிறைச்சாலை பேருந்தைக் காணொளி பதிவு செய்துள்ளதாக உடுகம பொலிஸார் தெரிவித்தனர்.

உடுகம பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏதேனும் குற்றத்தைச் செய்யும் நோக்கத்துடன் இவர் இவ்வாறு காணொளி பதிவு செய்தாரா என்பது குறித்துப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபரான பெண்ணின் மகன் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பெண் உடுகம முதன்மை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஓகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!