உரிய மனநிலையில் இல்லை: வழக்கிலிருந்து டெய்சி விடுவிப்பு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபொரஸ்ட்டை குறித்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (25) தீர்ப்பளித்துள்ளது.

பிரதிவாதியான டெய்சி ஃபொரஸ்ட் வழக்கின் விசாரணைகளை எதிர்கொள்ளக் கூடிய தகுதியான மனநிலையில் இருக்கின்றாரா? என்பது தொடர்பில் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ஊடாகக் கோரப்பட்டிருந்த விசேட மனநல மருத்துவ அறிக்கையை, பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் ஜனக பண்டார இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

குறித்த பிரதிவாதி விசாரணைகளை எதிர்கொள்ளும் வகையில் ஆரோக்கியமான மனநிலையில் இல்லை என அந்த மருத்துவ அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

முன்வைக்கப்பட்ட மருத்துவ ஆதாரங்கள் மற்றும் விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, டெய்சி ஃபொரஸ்ட்டிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுவிப்பதற்கு உத்தரவிட்டார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!