கிளிநொச்சியில் துப்பாக்கிச்சூடு! வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடிய சாரதி!

கிளிநொச்சியில் டிப்பர் வாகணமொன்றின் மீது பொலிசாரால் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறுப் பகுதியில் பயணித்த டிப்பர் மீதே இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இரவு 9.30 மணியளவில் மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தை புளியம்பொக்கனை சந்தியில் வைத்து பொலிசார் மறித்து சோதனை செய்ய முற்பட்டுள்ளனர்.

இதன்போது பொலிசாரின் சமிக்ஞையை மீறி சென்ற டிப்பர் வாகனம் சென்ற நிலையில், பொலிசாரினால் து்பாக்கி சூடு மேற்கொள்ளப்டப்டுள்ளது.

பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் டிப்பர் வாகனம் நிறுத்தப்பட்ட நிலையில், வாகன சாரதி தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, மணல் மற்றும் டிப்பர் வாகனத்தை மீட்ட காவல்துறையினர் சாரதியை தேடி வருவதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Face book

Related Posts :

Special News :

Entertainment :

Special News

semmani
செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதிகோரி மதுரையில் வெடித்த போராட்டம்!
hief
நவாலியில் களவாடப்பட்ட ஐம்பொன் விக்கிரகம்!
77e98751-ec05-4949-8ca7-d07aa8aec61b
முள்ளிவாய்க்காலில் தேர் திருவிழாவுக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!
New Project t (3)
குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட வர்த்தகரின் உடல்: நடந்தது என்ன?
IMG_5048
பாடசாலை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவில்லை: போராட்டத்தில் குதித்த பாடசாலை மாணவன்!
news
மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன்!